பல்கலைக்கழகத்தில் உலாவும் சிறுத்தை, அச்சத்தில் மாணவர்கள் ..நடவடிக்கை எடுக்க போராட்டம்

x

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பதியில் மலை அடிவாரத்தில் கால்நடை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப் பல்கலைக்கழகத்திற்குள் வனவிலங்குகளின் உலா வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று, நாய் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை பல்கலைகழக வளாகத்திற்குள் போட்டு சென்றுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்லூரி வளாகத்தின் முன்பு மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்