கண்ணில் மிளகாய்த்தூள் தூவி 35 லட்சம் அபேஸ்.. சிக்கிய 12 பேர் - திருப்பதியில் அதிர்ச்சி

x

திருப்பதியில் கண்ணில் மிளகாய்த்தூளை தூவி, 35 லட்ச ரூபாயை பறித்து சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சங்கர் என்பவரை அணுகிய சிலர், கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பாக கள்ளநோட்டுகளை தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 35 லட்ச ரூபாயுடன் திருப்பதி சென்ற சங்கரை, புறநகர் பகுதிக்கு வரவழைத்த மோசடி கும்பல், அவரது கண்ணில் மிளகாய்த்தூளை தூவி 35 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய திருப்பதி போலீசார், வேலூரை சேர்ந்த லட்சுமி காந்தம் என்பவர் உட்பட 12 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து சுமார் 31 லட்சம் ரூபாய் பணம், ஒரு கை துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்