ஆளுநருடன் திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை குழு சந்திப்பு

x

திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழு தலைவர் ஜே.சேகர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தனர். அப்போது, தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்று ஆளுநரும் வருவதாக ஒப்புக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பகவத் கீதை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்