"திருப்பதியில் திருடு போன பக்தர்களின் 1 கோடி செல்போன்கள்" - போலீசார் செய்த சூப்பர் செயல்

x
  • திருப்பதியில், திருடு போன பக்தர்களின் செல்போன்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டு, கொரியர் சர்வீஸ் பங்களிப்புடன் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன.
  • திருப்பதியில் செல்போன்களை பறிகொடுக்கும் பக்தர்கள், காவல் நிலையத்துக்கு வராமலேயே, தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இதற்காக, மொபைல் ஹன்ட் என்ற பெயரில் பிரத்யேக வாட்ஸ்அப் நம்பர் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன்படி, காணாமல் போன செல்போன்களில், 79 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 780 செல்போன்கள் மீட்கப்பட்டு, மூன்று கட்டங்களாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • இந்நிலையில், 4ஆம் கட்டமாக 45 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்களை மீட்டு, திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
  • மேலும், செல்போன்களை தவறவிட்ட பக்தர்களுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்