ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு - துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம்

x
  • திருநெல்வேலி ஆவின் பால் நிறுவனத்தில் நடந்த முறைகேடு காரணமாக, துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  • ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில், தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • அதில், பொது மேலாளராக இருந்த ஸ்ரீரங்கதுரை என்பவர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டது.
  • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
  • அதன்பேரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு துணை பொது மேலாளராக மாற்றப்பட்ட ஸ்ரீரங்கதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்