திருச்செந்தூரில் ரஜினிகாந்த் மகள் கணவர், மகனுடன் சாமி தரிசனம்.. செல்பி எடுக்க முயற்சி... தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

x

திருச்செந்தூரில் ரஜினி மகள்.. செல்பி எடுக்க வந்த பக்தர்கள்.. தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரஜினிகாந்த்தின் 2வது மகள் சவுந்தர்யா தனது கணவர், குழந்தைகளுடன் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்தார்.




ரஜினிகாந்த்தின் 2வது மகளும் இயக்குநருமான சவுந்தர்யா இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். அவருடன் கணவர் விசாகனும் மகன் வேத் கிருஷ்ணாவும் வந்திருந்தனர். அவர்களுக்கு சண்முக விலாசத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது மூவரையும் பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர்.




சவுந்தர்யாவைக் அங்கிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டதால், கோயிலின் ஒவ்வொரு இடத்துக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக கடலுக்குச் செல்லும்போது ஒருசிலர் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். உடனே சவுந்தர்யாவுக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள், அவர்களை வர விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடலில் கால் நனைத்துவிட்டு, தாங்கள் வந்த காரில் மூவரும் திருச்செந்தூரிலிருந்து கிளம்பினர்.





Next Story

மேலும் செய்திகள்