"நேக்கா, ஷோக்கா ஒரு திருட்டு" - நகைக்கடையில் கைவரிசை காட்டிய டிப்டாப் பெண்கள்

x

கேரளாவில் நகை வாங்குவதாக கூறி கடைக்கு வந்த பெண்கள் 3 சவரன் தங்க வளையலை திருடிச் சென்றனர்.

கண்ணூர் அருகே தளிப்பரம்பில் உள்ள நகைக்கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்களுக்கு பிடித்த மாடல் இல்லை என கூறிவிட்டு சென்ற நிலையில் இருப்பில் இருந்த 3 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

அப்போது கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது அந்த பெண்கள் 2 பேரும் தங்க வளையல்களை எடுத்து மறைத்து வைப்பது தெரியவந்தது.

இதன்பேரில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்