திடீரென பரபரப்பாக காவல் நிலையம் உள்ளே புகுந்த ’டிக்டாக்’ சூர்யாதேவி - ஒரு நொடியில் அதிர்ந்து போன போலீஸ்

x

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சோசியல் மீடியா பிரபலமான சூர்யா தேவி, காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பரபரப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு..

அரசியல், சினிமா மற்றும் டிக்டாக் பிரபலங்களை வாய்க்கு வந்தபடி, கடுமையாக பேசி பிரபலமானவர்தான் இந்த சூர்யாதேவி...

சமீபத்தில் நடிகை வனிதாவின் 4-வது திருமணத்தின்போது அவரை விமர்சித்தது, டிக்டாக் பிரபலம் ரவுடி சூர்யா பேபியுடன் குழாய் அடி சண்டை என, சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு பேர்போன சூர்யா தேவிக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்...

சமூக வலைதளங்களில் கெத்து காட்டிய சூர்யாதேவி, காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம், தற்போது டிரெண்டிங் ஆகி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சூர்யாதேவிக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர்.

கடந்த 21ம் தேதி, மணப்பாறை காவல் நிலையத்தில் கணவர் மருதுபாண்டி மற்றும் தனது சகோதரர் தேவா ஆகியோர் அடித்து துன்புறுத்தியதாக புகார் தெரிவித்தார்.

இந்த குடும்ப சண்டையில், சூர்யாதேவியின் மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும், புகார் அளித்திருந்தார்.

இருதரப்பு புகாரையும் போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீரென ஆவேசப்பட்ட சூர்யாதேவி, நேராக காவல்நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் சென்று, தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

குடும்ப சண்டை என்பதால், இருதரப்பு புகாரையும் விசாரித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஆறுதலாகி கூறி சூர்யாதேவியை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

உண்மையிலேயே போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி சூர்யாதேவி தீக்குளிக்க முயன்றாரா? அல்லது வழக்கமான பாணியில் இதுவும் ஒரு பப்ளிசிட்டியா? என்பது வரும் நாட்களில் தெரியவரும் என நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்