மீண்டும் இறுகிய கட்டுப்பாடுகள்.. கொரோனா டெஸ்ட் கட்டாயம்.. வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்..!

x

டெல்லியில் பி.எஃப்.7 திரிபு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் 24 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மற்றவர்களும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.7 திரிபு டெல்லியில் கண்டறியப்படவில்லை என்பதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்