பெனால்டி ஷூட் அவுட்டில் த்ரில் வெற்றி.. சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

x

தெற்காசிய கால்பந்து போட்டியில் தொடர்ந்து 9வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் குவைத் அணியுடன் இந்திய அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் இருஅணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன. கூடுதல் நேரத்திலும் கோல்கள் ஏதும் அடிக்காததலால், வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 5க்கு 4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்