தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சல்.. வாங்க வந்தவர்களை வளைத்து பிடித்த போலீஸ்

x

துபாயிலிருந்து பார்சலில் கடத்தப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின், கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், பார்சலுக்குள் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பார்சலை எடுக்க வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்