புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர்..அதிரடி காட்டிய போலீசார்

x

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சுற்றியுள்ள கிராமங்களில், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் திருட்டுகள் நடப்பதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கிராமங்களை சுற்றியுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அய்யனார், தமிழன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மூவரும் திருட்டை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை, ஒரு கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்