"ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் மூன்று கோடி தொகுதி மேம்பாட்டு நிதி.." - தமிழக அரசு அரசாணை

x

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதிக்கான மொத்த தொகையில் இருந்து, 50 விழுக்காடு முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்த தொகையான 702 கோடியில், 351 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 50 விழுக்காடு நிதி, இந்தாண்டு நிறைவடையும் முன் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்