சம்பளம் கேட்டால் கொலை மிரட்டல்... பெண்களை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி - பரபரப்பு சம்பவம்

x

சேலம், சூரமங்கலம் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

அதில் அந்த பெண் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள சினிமா நிறுவனம் ஒன்றில் 3 மாதமாக வேலை பார்ப்பதாகவும், 3 மாதமும் சம்பளம் தரவில்லை எனவும், இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அங்கு பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுக்க போவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சினிமா நிறுவனத்தின் ஓனர்களான வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகிய இருவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்