காதலி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்... திருமணம் செய்ய வற்புறுத்திய காதலன் - இடுக்கியில் பரபரப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியும், கொச்சியை சேர்ந்த ஷாஜகான் என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஷாஜகான் வேறு ஒரு பெண்ணுடனும் பழகி வந்ததால் சட்டக்கல்லூரி மாணவி அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

அப்போது அந்தரங்க படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய ஷாஜகான், காதலியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் தரப்பு அளித்த புகாரின் பேரில் போலீசார் ஷாஜகானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com