மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல ஆயிரம் பேர் முன்பதிவு

x

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண சுமார் ஆறு ஆயிரம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிகர நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. முன்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக ஐந்து ஆயிரத்து 793 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பதிவுக்கான குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றவர்கள் நாளை முதல் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்