தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் .. எச்சரித்த போலீசார்..!

x

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேருக்கு, தூத்துக்குடி மாநாகராட்சியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நாளை, 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் போலீசார், நாளை அம்மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து போலீசார், முத்துநகர் கடற்கரை பூங்காவை பூட்டி, பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனிடையே நினைவு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்