பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி அடித்த மாணவனின் தாய், தந்தை, தாத்தா கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு

x
  • கீழநம்பிபுரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் பாரத்...
  • இவரை, அப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி ஆகியோர், ஓட ஓட விரட்டி தாக்கி உள்ளனர்.
  • அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கிய இவர்கள், பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.
  • இது தொடர்பாக தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி, தாத்தா முனியசாமி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.
  • விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவர் வீட்டுப்பாடம் செய்யாததைக் கண்டித்ததால் ஆசிரியர் பாரத் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
  • இந்நிலையில், 3 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்