விலகி விலகி சென்ற 12ம் வகுப்பு மாணவி.. தலையில் அரிவாளால் தாக்கிய இளைஞர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

x
  • தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுதிவிட்டு வந்த அந்த மாணவியிடம், சோலையப்பன் பேச முயன்றுள்ளார்.
  • அப்போது அந்த மாணவி அவரிடம் பேசாமல் விலகி செல்லவே ஆத்திரமடைந்த சோலையப்பன், அரிவாளால் மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார்.
  • இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில், தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • தாக்குதலுக்கு ஆளான மாணவி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்