தனியாக இருந்த பாட்டிக்கு நேர்ந்த கொடுமை சிக்கிய இளைஞர்கள் - கட்டுப் போட்டு கவனித்த போலீஸ்

x
  • தூத்துக்குடி அருகே தனியாக இருந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • தூத்துக்குடி மாவட்டம், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி காந்திமதி தனியாக வசித்து வருகிறார்.
  • நேற்று அதிகாலை, காந்திமதியின் வீட்டிற்குச் சென்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர நயினார், நெல்லையப்பன் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
  • மூதாட்டி பணம் கொடுக்காததால், அவரை கத்தியால் தாக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
  • சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • காந்திமதியின் மகன் அளித்த புகாரின்பேரில், தட்டப்பாறை போலீசார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • காவல் நிலைய கழிப்பறையில் இருவரும் வழுக்கி விழுந்ததில், காயம் ஏற்பட்டதில், மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்