உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு... துண்டான 4 விரல்கள்... தூத்துக்குடியில் பரபரப்பு

x
  • கயத்தாறு அருகே திருமலாபுரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
  • இவருக்கும், திருமலாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கண்ணன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
  • கண்ணனின் மனைவி ராஜேஸ்வரி, தற்போது திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
  • இந்த நிலையில், தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த சுப்புராஜிடம், கண்ணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் செல்வகுமார் ஆகிய மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்புராஜை துரத்திச் சென்று, அரிவாளால் தாக்கியதில், அவரது வலது கையில் உள்ள 4 விரல்கள் துண்டாகின.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், கண்ணன் மற்றும் அவரது மகன் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.
  • தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவரான ராஜேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்