"இந்த முறை வச்ச குறி தப்பாது"..விட்டதை பிடிக்கும் சிவகார்த்திகேயன் - காத்திருப்புக்கு கை மேல் பலன்

x
  • முதன்முறையாக தன்னுடைய கரியரில் தீபாவளி ரிலீஸாக, கடந்த ஆண்டு, ப்ரின்ஸ் திரைப்படம் வெளியானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
  • ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறாததால், அவரது ரசிகர்களும் அப்செட்டில் உள்ளனர்.
  • தற்போது மாவீரன் படத்தில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன், முன்னதாக அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
  • இன்று நேற்று நாளை பட புகழ் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வந்தப்போது பெரும் வரவேற்பு கிடைத்தது
  • இந்த பாடல் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லையே என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.
  • அண்மைக்காலமாக தனது மேடை பேச்சுகளில் அயலான் அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயன், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
  • PINKVILLAA சார்பில் MOST ELEGANT PERSONALITY என்ற விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை தயாரிப்பாளர் போனி கபூர் கைகளால் பெற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
  • அப்போது, அயலான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சரத் அதே மேடையில் தொகுப்பாளராக இருந்தார்.
  • மும்பையில் தற்போது நீங்கள் இருப்பது முதன்முறையாக இருக்கலாம்... ஆனால் இந்த தீபாவளி வந்துவிட்டால் மும்பை முழுக்க நீங்கள் தான் இருப்பீர்கள் என சூசகமாக தெரிவித்தார்.
  • இந்த வீடியோவை பார்த்த பின், போன தீபாவளி ரிலீஸ்-ல் விட்டதை இந்த தீபாவளி ரிலீஸ்-ல் சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவார் என உற்சாகத்தில் உள்ளனர், ரசிகர்கள்...

Next Story

மேலும் செய்திகள்