"இதான் உனக்கு கடைசி Warning.."ஒத்த வாரத்தையில் வந்த வழிக்கே திரும்பிய போலீஸ்..திவ்யா வீட்டில் நடந்த திகிலூட்டும் சம்பவம்

x

தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா. இருவரும் திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டை வீசி பொதுவெளியில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது வரை தொடர்ந்து, இருவரும் அடிக்கடி மோதி வருவது சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல், அவர்களை பின் தொடரும் ரசிகர்களின் மத்தியிலும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது...

  • நான் எங்க போறேன்னு முதற்கொண்டு அர்ணவுக்கு தெரியுது"
  • "எனக்கு அர்ணவ் ஸ்பை வைத்துள்ளார்"
  • "நிம்மதியா வாழவிடாமல் அச்சுறுத்துகிறார்"
  • "கர்நாடகாவில் இருந்திருந்தால் ஆதரவு கிடைத்திருக்கும் என்கிறார்கள்"
  • "நான் நம்பவில்லை, எனக்கு தமிழகத்திலேயே நல்ல ஆதரவு இருக்கிறது"

திவ்யா கர்ப்பிணியாக இருந்தபோது, அவரை அர்ணவ் சித்ரவதை செய்ததாகவும், குழந்தையை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகாரளித்த நிலையில், அர்ணவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தது விவகாரத்தை சூடு பிடிக்க செய்தது. இதையடுத்து, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அர்ணவ், தனியே வசித்து வந்த நிலையில், திடீரென தனது வக்கீல் மற்றும் பவுன்சர்களுடன் சேர்ந்து திவ்யா குடியிருந்த குடியிருப்பிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது... அங்கு, வீடு தன்னுடைய பெயரில் இருப்பதெனவும், வீட்டில் வசித்து வரும் திவ்யா பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டுமெனவும் கூறி வீட்டின் முன்பு பவுன்சருடன் அர்ணவ் தகராறு செய்திருக்கிறார்...இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவல்துறையிடத்தில் முறையாக புகாரளிக்காமல் இதுபோன்று பவுன்சருடன் வந்து தகராறு செய்ய கூடாதெனவும், காவல்நிலையத்தில் முறையாக புகாரளிக்க கோரி அறிவுறுத்தினர்...அப்போது, திவ்யாவின் வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அர்ணவ், வீட்டினுள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது... இந்த விவகாரத்துக்கு பதிலளித்த திவ்யா, அர்ணவ் வீடு வாங்க தன்னுடைய 7 லட்சம் மதிப்பிலான நகைகளை கழட்டி கொடுத்ததாகவும், அதற்கான தவணையை தன்னுடைய பணத்திலேயே அவர் கட்டி வந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்