"ரயில் விபத்துக்கான மூல காரணம் இதுதான்"ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் "புதன்கிழமைக்குள்..."

x

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 294ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இப்பாதையில் ரயில்களை இயக்கும் வகையில், வரும் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதே தங்கள் இலக்கு என்றும் குறிப்பிட்டார். விபத்துக்கான காரணம் மற்றும் அதற்கு காரணமானவர்களை கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்த அஷ்வினி வைஷ்ணவ், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மாற்றமே காரணம் என தெரிவித்தார். எனினும், தற்போது சீரமைப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்