ED ரெய்டுக்கு காரணம் இது தான்.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்..

x

வேளாங்கண்ணியில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. 66 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மற்றும் பயிற்சி மையத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். பேருந்து உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரத்தின் செயல்பாடுனை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க மற்றும் முதலமைச்சரை கண்டு பிரதமர் மோடி அஞ்சுவதே, அமலாக்கத்துறை சோதனைக்கு காரணம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்