"போருக்கான நேரம் இதுவல்ல" - ரஷ்ய அதிபரிடம் நேருக்கு நேர் சொன்ன பிரதமர்

x

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேசினார்.

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பேசிய அவர், போருக்கான நேரம் இதுவல்ல என வலியுறுத்தினார். இது குறித்து பலமுறை தொலைப்பேசி வாயிலாக பேசியதையும் பிரதமர் சுட்டிக்காட்டார். அதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர், உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் கவலை கொள்வதாகவும், விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபருடனான பிரதமரின் பேச்சை, அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுள்ளிவன், நீண்ட காலமாக ரஷ்யாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு தலைவரிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்