"இது எனக்கான களம் அல்ல" - பதவியை ராஜினாமா செய்த திமுக பெண் கவுன்சிலர்

x

பொள்ளாட்சியில் திமுக கவுன்சிலராக இருந்த நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பொள்ளாட்சி நகராட்சியின் 7வது வார்டின் திமுக கவுன்சிலராக இருந்த நர்மதா, நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு சேவை செய்வதற்காக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டதாகவும், தற்போது தனக்கான தளமாக கவுன்சிலர் பதவி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக கவுன்சிலர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்