சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கணவன் மீது ஊற்றிய மனைவி - தாயும், மகளும் சேர்ந்து போட்ட பிளான்

x
  • திருவெறும்பூர் அருகே, மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், மது அருந்தி விட்டு மாமியார் இன்னாசியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இதனால் ஆத்திரமடைந்த மனைவி டயானா, இன்னாசியம்மாள் இருவரும் சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றியதாக தெரிகிறது.
  • படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக, டயானா, இன்னாசியம்மாள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்