"ஊராட்சி தலைவர் நீங்களா? மனைவியா?" - ரெய்டு விட்ட திருவண்ணாமலை கலெக்டர்

x

திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூர், திண்டிவனம், கலியம் ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அத்திமூர் மலை அடிவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், வாழை பூங்கா அமைக்க தோட்டக்கலைத் துறைக்கு பரிந்துரை செய்ததுடன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின், தரமற்ற கட்டடத்தை உடனே இடிக்க உத்தரவிட்டார்.

ஆட்சியரின் ஆய்வின் போது, அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாவுக்கு பதில், அவரது கணவர் வந்திருந்ததால், அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், ஊராட்சி மன்ற தலைவரின் பணியை முறையாக செய்ய வேண்டுமென கண்டித்தார்.

தொடர்ந்து திண்டிவனம் பகுதிக்கு சென்ற ஆட்சியரை வழிமறித்த கலியம் கிராமத்தினர், மழை நீர் வடிகால் தொடர்பான கோரிக்கையை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்