"ஏன் சட்டைய பிடிச்சிட்டு இருக்க.." "செத்து போயிட்டாங்களா யாருனா..?"போதையில் போலீசிடம் ரகளை

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டது. மணிக்கூண்டு அருகே நகர காவல் நிலைய மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவர் போலீசாரை, தகாத வார்த்தைகாளல் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், எச்சரித்து அனுப்பி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்