திருவண்ணாமலை ஆனி மாத உண்டியல் காணிக்கை..எவ்வளவு தெரியுமா..?

x

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆனி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனி மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு உண்டியல் மூலம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் 149 கிராம் தங்கமும், ஆயிரத்து 260 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்