இன்று பா.ரஞ்சித் பங்கேற்கவிருந்த சிலை திறப்பு விழாவுக்கு போலீஸ் திடீர் அனுமதி மறுப்பு

x
  • இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொள்ள இருந்த சிலை திறப்பு விழாவிற்கு திடீரென காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
  • கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஏ.டி.அர்ச்சுனன். இவர் தனது சொந்த இடத்தில் அம்பேத்கர், புத்தர், திருவள்ளுவர் சிலைகளை வைத்து, இன்று திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருந்தார்.
  • இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், சிபிஎம். பாலகிருஷ்ணன், பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.
  • இந்நிலையில், உரிய அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று இரவு காவல்துறையினருடன் வந்த வருவாய் துறையினர், சிலைகளை துணியால் மூடினர்.
  • அப்போது, சொந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை என அதிகாரிகள் வாய்மொழியாக கூறியதாக அர்ச்சுன‌ன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார்.
  • பின்னர் போலீசாருக்கும் அவருக்கும் சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்