"இந்த கையில் காசு.. அந்த கையில் அரசு வேலை"... பல கோடியை சுருட்டிய 'பலே கில்லாடி' - தட்டி தூக்கிய போலீசார்

x
  • திருவள்ளூர் மாவட்டம், புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தெருவதாகக் கூறி 12 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
  • இதேபோல், ரகு தனது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார்.
  • பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
  • இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்