தங்க நகைகள் கொள்ளையடிக்க சென்ற கும்பல்... தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் ஆத்திரம்... கோபத்தில் மூதாட்டியை அடித்துக் கொன்ற கொடூரம்

x
  • கொள்ளையடிக்க சென்ற இடத்தில் தங்கத்திற்கு பதிலாக பித்தளை இருந்ததால் கோபமடைந்த கொள்ளையர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் திருத்தணி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். 82 வயதான இவர், தனியாக வசித்து வந்தார்.
  • இவரின் மகன் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
  • தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வந்த வள்ளியம்மாள், இன்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டின் உள்ளே சடலமாக கிடந்தார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வள்ளியம்மாள் கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
  • மூதாட்டி தனியாக வசிப்பதை நோட்டமிட்ட கும்பல் கொள்ளையடிக்க வந்திருக்கிறது.
  • ஆனால் கடந்த மாதம் தன் வசமிருந்த நகைகள் அனைத்தையும் வள்ளியம்மாள் தன் மகனிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.
  • திருட வந்த இடத்தில் ஏமாந்து போன அந்த கும்பல் மூதாட்டியை கொடூரமாக கொன்றது உறுதியான நிலையில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்