புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வணிக ஆய்வாளர்

x
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வீட்டு மின் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
  • பொதட்டூர்பேட்டை மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்த கணபதியிடம், கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்தார்.
  • இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
  • இதையடுத்து, போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கணபதியிடம் பிரகாஷ் வழங்கினார்.
  • அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்