கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

x

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியில், தற்போது 33.5 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி ஐந்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்