குழந்தை இல்லை என நெருக்கடி? விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு - நெஞ்சை பதறவைக்கும் பின்னணி

x
  • திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண்ணும், திருப்பத்தூர் மற்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரும், 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இந்நிலையில், ஆதிலட்சுமிக்கு குழந்தை இல்லாத‌தால், கணவர் குடும்பத்துடன் பிரச்சினை இருந்த‌து வந்த‌தாக தெரிகிறது. இதனிடையே, ஆதிலட்சுமியை அவரது கணவர் சூர்யா கடுமையாக திட்டியதாக தெரிகிறது.
  • இதனால் விரக்தியடைந்த ஆதிலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆதிலட்சுமி உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
  • . இந்நிலையில், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆதிலெட்சுமியின் பெற்றோர், திருபத்தூர் மருத்துமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்