திருக்குறள் மீது தீரா காதல்.. விரல் அளவு நூல் எழுதி சாதனை...! புத்தகங்களை வைக்க குட்டி மரவீடு...

திருக்குறள் மீது தீரா காதல்.. விரல் அளவு நூல் எழுதி சாதனை...! புத்தகங்களை வைக்க குட்டி மரவீடு...
x

திருக்குறளை கையடக்க நூலாக எழுதியும், சிறிய மர வீட்டில் 1330 குறளையும் எழுதி சாதனை படைத்த பள்ளி ஆசிரியை, அதனை சபாநாயகர் அப்பாவு-விடம் காண்பித்து பாராட்டுகளை பெற்றார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் பொன்ரேகா. இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், திருக்குறள் மீது கொண்ட காதலால், மூன்றரை செண்டி மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் கையடக்க நூலாக திருக்குளை எழுதி சாதனை படைத்துள்ளார். அதேபோல் 7 மரத்துண்டுகளில் 1330 திருக்குறளை எழுதி, திருவள்ளுவர் இல்லம் என்ற சிறிய வீட்டையும் உருவாக்கியுள்ளார். பாரதியார் மீது கொண்ட பற்றால், புதிய ஆத்தி சூடியை 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவை எழுதி, பாரதியார் உருவத்தையும் பொன்ரேகா வரைந்துள்ளார். இவற்றை அவர் சட்டப்பேரை சபாநாயகர் அப்பாவு - விடம் காட்டி, பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்