அடுத்தடுத்து 3 கடைகளில் 1 லட்சத்தை அள்ளி சென்ற திருடர்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

தாம்பரம் அருகே தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற 3 பேரை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் உள்ள கடைகளில் கல்லாவில் இருந்த பணத்தை அடையாள தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில், ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இதில், 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்