நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு ஜீட் விட்ட திருடர்கள்

x

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்து செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. துகோகஞ்ச் பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தின் முன்பு பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் அப்பெண்ணின் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதில் கீழே விழுந்த அப்பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது. காவலர்கள் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், திருட்டு சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்