தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கில்லாடி திருடர்கள் கைது | Perambalur

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கில்லாடி திருடர்கள் கைது | Perambalur
x

பெரம்பலூர் அருகே கோவில்களில் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்த 2 இளைஞர்களை பொது மக்களே பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் மர்மநபர்கள் தொடர்ச்சியாக கோவில்களில் கொள்ளையடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரையும், களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்துரு என்ற இளைஞரையும் கோவிலில் திருடும் போது கையும் களவுமாக பொது மக்கள் பிடித்துள்ளனர். இதையடுத்து, அவர்களை சரமாரியாக பொது மக்கள் தாக்கிய நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரையும் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்