போலீஸ் என கூறி நகை வியாபாரியிடம் ரூ2.2 கோடியை பறித்த திருட்டு கும்பல் - சிவகங்கையில் பயங்கரம்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், கடந்த 11ஆம் தேதி சென்னை சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் என கூறிக்கொண்டு அவரை கடத்திய சில நபர்கள், பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரனிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 2 கோடியே 20 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்