"காமத்துக்காக கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்க.. முடியை அறுத்து தலையை குதறியிருக்காங்க" - கதறி துடிக்கும் பெண்ணின் தாய்

x

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே ஆணவக்கொலை செய்த சம்பவத்தில், வெட்டு காயங்களுடன் தப்பிய பெண்ணிடம் 2 மணி நேரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் வாக்குமூலம் பெற்றனர்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரைஅருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் என்பவரை அவரது தந்தையே ஆணவக் கொலை செய்ததோடு, அடைக்கலம் கொடுத்த மூதாட்டியும் வெட்டி கொல்லப்பட்டார். மகனையும், தாயையும் வெட்டி கொலை செய்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாமனாரிடம் வெட்டுபட்டு பலத்த காயங்களுடன் தப்பிய இளம் பெண் அனுசியா, மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார். அவரிடம், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் 2 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மகள் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரது தாய் கலங்கிய நிலையில் நீதி கோரி பேட்டியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்