"எங்களுக்கு எதுவுமே சொல்லவில்லை..உடலை அடக்கம் பண்ணிட்டதா சொல்ராங்க" - கள்ளச்சாராயம் மரணம் - கதறும் உறவினர்கள்

x

கள்ளச்சாராய விவகாரத்தில் தங்களுக்கு தெரியப்படுத்தாமல் உறவினர்களின் உடல்களை புதைத்துவிட்டதாக இருளர் சமூகத்தினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மகள் புகார் மனு அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரை அடுத்த பெருங்கரணையில் கள்ளசாராயம் குடித்து, இருளர் சமுதாயத்தை சேர்ந்த வள்ளியப்பன் அவரது மனைவி சந்திரா, உறவினர்கள் வசந்தா மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் உயிரிழந்தனர். இதனையடுத்து வள்ளியப்பனின் மகள் தேவி உள்ளிட்டோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் தங்களது உறவினர்களின் உடல்களை பற்றி எந்த விவரமும் தங்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்து விட்டதாக கூறியுள்ளனர். இறப்பில் மர்மம் உள்ளதால் உடலை தோண்டி எடுத்து மறு உடல் கூராய்வு மேற்கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்