"அவங்க குழந்தைகளை படிக்க வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு உள்ளது" - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

x

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். உதகையில் 950 வடமாநில தொழிலாளர்களுடன், அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் அவர்கள் இரவு உணவு வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்