இந்திய அணியின் தோல்விக்கு "இந்த இரண்டு பேர் தான் காரணம்.." - கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடந்ததை பிசிசிஐ கருத்தில்கொள்ள வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார். இந்திய அணியின் தோல்வி தொடர்பாக பேசிய ரவி சாஸ்திரி, ரோகித் சர்மாவும் புஜாராவும் மோசமான ஷாட்களால் 2வது இன்னிங்சில் ஆட்டமிழந்ததாகக் கூறினார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆடியதாக கூறிய ரவி சாஸ்திரி, இது பற்றி பிசிசிஐ ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்