"CSK -க்கு இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்." - பவுலிங் அனாலிஸ்ட் சொன்ன தகவல்

x

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அடுத்த இரண்டு போட்டிகளும் சென்னை அணிக்கு முக்கியமானவை என, சென்னை அணியின் பவுலிங் அனாலிஸ்ட் எரிக் சிம்சன்ஸ் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள், இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்றைய (14.05.2023) போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை அணிக்கு இன்னும் இரண்டு லீக் ஆட்டங்களே மீதமுள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில், பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் பவுலிங் அனாலிஸ்ட் எரிக் சிம்சன்ஸ், அடுத்த இரண்டு போட்டிகளும் சென்னை அணிக்கு முக்கியமானவை எனவும், இன்றைய (14.05.2023) போட்டியில் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்