"இந்த வீரர்கள் தான் எங்களுக்கு முக்கியம்.." - அதிரடியாக பேசிய தோனி

x

தனிப்பட்ட சாதனைகளைக் கருத்தில் கொள்ளாமல், அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களைத் தேர்வு செய்வதே முக்கியம் என சென்னை அணியின் கேப்டன் தோனி கூறி உள்ளார். டெல்லி உடன் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்றது குறித்து பேசிய தோனி, அணியின் நலனில் அக்கறை காட்டும் வீரர்களைத் தேர்வு செய்வதே முக்கியம் என்றும், நாக்-அவுட் போட்டிகளில் அப்படிப்பட்ட வீரர்களால் தான் சிறப்பாக ஆட முடியும் என்றும் கூறினார். சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பொஷிஷனில் ஆட வைப்பதே வெற்றிக்கான காரணம் என்றும் தோனி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்