ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது... தடுப்பு சுவர் இடிந்து விழுந்து தள்ளுவண்டிகள் சேதம்

x

ஏற்காட்டில் கனமழையின் காரணமாக ஹோட்டலின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், தள்ளுவண்டி கடைகள் சேதமடைந்தன. ஏற்காட்டில் மாலைவேளையில் கொட்டி தீர்த்த கனமழையினால், படகு இல்லம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலின் தடுப்பு சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு தள்ளு வண்டி கடைகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுவர் இடிந்து விழுந்தது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், இடிந்து விழும் நிலையிலிருந்த தடுப்பு சுவரின் மற்ற பகுதிகளையும் ஜேசிபி மூலம் இடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்