வேலூர் பாஜக செயலாளர் மீது புகார் Notice கொடுக்க சென்றபோது பரபரப்பு | VELORE | BJP

x

பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரங்களை வேலூர் இப்ராஹிம் வழங்கினார். பஷீராபாத் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை வெளியேற்றினர். இதனையடுத்து, தன்னை தாக்க சிலர் முயற்சித்ததாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் வேலூர் இப்ராஹிம் புகார் அளித்தார். இந்நிலையில், மதப் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் அளித்ததாக, வேலூர் இப்ராஹிம் மீது முகமது அப்சல் என்பவர் புகார் அளித்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்